டிரெண்டிங்

திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திருப்பதி லட்டு சர்ச்சை இன்னும் முடியாத நிலையில் தற்போது மற்றொரு சர்ச்சையாக திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் தயிர் சாதத்தில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் சேர்ந்த சந்து எனும் பக்தர் தனது நண்பர்களுடன் மலைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து வந்தனர்.

பின்னர் திருமலையில் உள்ள யாத்திரிகள் சமுதாய கூடம் மாதவ நிலையத்தில் மொட்டையடித்து உடமைகளை லாக்கரில் வைத்தனர்.

பின்னர் அங்குள்ள அன்னதான கூடத்தில் சாப்பிட சென்றனர். அங்கு பரிமாறப்பட்ட தயிர் சாதத்தை சாப்பிட்டு கொண்டுருந்தபோது அதில் பூரான் இருப்பதை பார்த்த பக்தர் சந்து அதிர்ச்சி அடைந்தார்.

அதுகுறித்து அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்களிடம் காண்பித்து இவ்வாறு வந்துள்ளதாக கூறினார்.

ஆனால் பக்தர்களை பேசி அங்கிருந்து வெளியேறும்படியும் கூறியதால் பக்தர்கள் கோபம் அடைந்து அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.

தங்களுக்கு நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். ஆட்சி மாற்றம் நடந்தாலும் அதிகாரிகள் ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை புதிய அன்னதானம் கூடத்தை திறந்து வைத்து அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு ஆலோசித்து பக்தர்களுகான வசதிகள் மற்றும் பிரசாத தயாரிப்பில் அலட்சியம் இருக்க கூடாது என எச்சரித்த நிலையில் அன்னதானத்தில் பூரான் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…

35 minutes ago

சூர்யாவுக்கு முன்னாடியே அவர் சிக்ஸ் பேக் வச்சிந்தார்- சிவகுமாருக்கு பதிலடி கொடுத்த விஷால்?

சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…

1 hour ago

லிப்டில் வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. எல்லை மீறிய வாலிபர் எஸ்கேப் : சென்னையில் ஷாக்!

சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…

1 hour ago

பாலியல் வன்கெடுமைக்கு பலியான 80 வயது மூதாட்டி.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…

1 hour ago

எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?

அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…

2 hours ago

கோவையில் ஜல்லிக்கட்டு திருவிழா பணிகள் விறுவிறு… 750 காளைகளுடன் மல்லுக்கட்டும் 500 காளையர்கள்..!!

கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…

2 hours ago

This website uses cookies.