ஆந்திர மாநிலத்தில் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது மகன் அமைச்சர் லோகேஷ் மற்றும் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் திருப்பதி வந்தார்.
விமான நிலையத்தில் திருப்பதி, சித்தூர் கலெக்டர்கள் பிரவீன்குமார், ஷன்மோகன், திருப்பதி மாநகராட்சி ஆணையர் அதிதி சிங் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து திருமலைக்கு சென்று இரவு தங்கி இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காம்பளகஸ் வழியாக சென்று வழிபாடு செய்தனர். முன்னதாக கோயில் மகாதுவாரம் முன்பு ( ராஜகோபுர வாயிலில் ) இஸ்தி கப்பால் மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் ஜீயர் மடத்திற்கு சென்றார்.
கோயிலுக்கு வெளியே பக்தர்கள் பொது மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன் நேரடியாக கூட்டத்திற்கு மத்தியில் சென்று பொது மக்களின் வாழ்த்துகள் கோஷத்திற்கு மத்தியில் ஜீயர் மடத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து பேடி அஞ்சனேய சுவாமி கோயிலில் வழிபாடு செய்து அகிலாண்டம் அருகே கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.