சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால், போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்திய பாடில்லை.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்துவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த இக்பால் பாஷா என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இக்பால் பாஷா கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட மறுநாளே ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.