சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக கண்காட்சி என்ற சிறப்பை பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பிப்ரவரி 16ம் தேதி புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது.
இந்த 45வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 18 நாட்களாக தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்றது. 800 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இந்த கண்காட்சிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர். இந்நிலையில், சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை, 15 லட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து சென்றுள்ளதாகவும், சுமார் 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் விற்பனை ஆகியுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…
This website uses cookies.