எண்ணெய் கசிவு பாதிப்பு… ரூ.8.68 கோடி நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் ; படகுகளை சரிசெய்ய தலா ரூ.10,000 வழங்க உத்தரவு

மிக்ஜாம்‌ புயலின்‌ போது பெய்த கனமழை காரணமாக எண்ணூர்‌ முகத்துவாரப்பகுதியில்‌, சென்னை பெட்ரோ கெமிக்கல்‌ நிறுவன
வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய்‌ கசிவினால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8 கோடியே 68 இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரணம்‌ வழங்க முதலமைச்சர் ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொசஸ்தலை ஆற்றில்‌, எண்ணூர்‌ முகத்துவார பகுதியில்‌ கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய்‌ கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில்‌ காட்டுக்குப்பம்‌, சிவன்படை குப்பம்‌, எண்ணு குப்பம்‌, முகத்துவாரகுப்பம்‌, தாழங்குப்பம்‌, நெட்டுக்குப்பம்‌, வ.உ.சி.நகா, உலகநாதபுரம்‌ மற்றும்‌ சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில்‌ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள்‌ மற்றும்‌ மீன்பிடி வலைகளில்‌ எண்ணெய்‌ படிந்து சேதம்‌ ஏற்பட்டது.

மேலும்‌, இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள்‌ எண்ணெய்‌ கசிவினால்‌ மீன்பிடித்‌ தொழிலுக்கு செல்ல இயலாததால்‌ அவர்களின்‌ வாழ்வாதாரமும்‌ பாதிக்கப்பட்டது. இதைக்‌ கருத்தில்‌ கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவாகளால்‌ வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்படும்‌ என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும்‌ ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடாந்து, கூடுதலாக எண்ணெய்‌ கசிவினால்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சாந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத்‌ தொகையாக தலா ரூ.12,500 வீதமும்‌, மேலும்‌ எண்ணெய்‌ கசிவினால்‌ பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட, படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும்‌ மொத்தம்‌ 3 கோடி ரூபாய்‌ அரசினால்‌ ஒப்பளிக்கப்பட்டதைத்‌ தொடர்ந்து, இந்நிவாரணத்‌ தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின்‌ வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும்‌ சென்னை மாநகராட்சி மண்டலம்‌ 1, வாடு 4, 6, மற்றும்‌ 7 ஆகிய பகுதிகளில்‌ எண்ணெய்‌ கசிவினால்‌ பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம்‌, மொத்தம்‌ 5 கோடியே 2 இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரணத்‌ தொகை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத்‌ தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படும்‌. எனவே, மிக்ஜாம்‌ புயல்‌ கனமழையினால்‌ ஏற்பட்ட எண்ணெய்‌ கசிவில் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 இலட்சம்‌ ரூபாய்‌ வழங்க முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

2 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

2 hours ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

3 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

3 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

5 hours ago

This website uses cookies.