சென்னை : உரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறி நிகழ்ச்சியை புறக்கணித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாதியில் வெளியேறிய சம்பவம் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் H1N1, டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும், ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையிலும், தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் காலை 10 மணி அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மொத்தமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நேரடியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காணொளி காட்சி வாயிலாகவும் நடைபெற இருந்த இந்த பயிற்சி கூட்டத்திற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் வருகை புரிந்தார்.
தமிழ் தாய் வாழ்த்து பாடல் நிறைவடைந்த நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என அதிகாரிகளிடம் அமைச்சர் கடிந்து கொண்டு கோபத்துடன் வெளியேறினார்.
அமைச்சரின் இந்த நடவடிக்கையால் விழி பிதுங்கி நின்ற அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பயிற்சி என்ற பெயரில் பெயரளவில் 500 செவிலியர்களை மட்டுமே வரவழைத்து அதிகாரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை என அதிகாரிகளுடன் கோபமுடன் அமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளோ, இது போன்ற சிறிய அரங்கில் எப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த முடியும் என அமைச்சர் சென்றபின் அமைச்சரின் நடவடிக்கை குறித்து பேசி வருத்தம் அடைந்தனர். பாதியில் நிறுத்தப்பட்ட கூட்டம் விரைவில் உரிய ஏற்பாடுகளுடன் மீண்டும் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.