சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி வருகிறது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இப்படியிருக்கையில், இன்று 2வது நாளாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் கீழே கணேசபுரம் பகுதியில் மழைநீரில் பயணிகளுடன் அரசுப் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனால், பேருந்தில் இருந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். பின்னர், இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் பொதுமக்களின் உதவியுடன் மக்களை மீட்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் வேகமாக அகற்றப்பட்டு விட்டாலும், பெரும்பாலான இடங்கள் மழையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.