சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக கனமழை கொட்டியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால், குறிப்பாக, தலைநகர் சென்னை, திருவள்ளூரில் பெய்த கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சாலைகளில் வெள்ளம் குளம் போல தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல, குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால், உடமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இன்று அதிகாலையோட மழை நின்று விட்டாலும், குறிப்பாக வேளச்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகுகளை வைத்து மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீவுத்திடலில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கார் பந்தயம் நடப்பதாக இருந்தது. தீவுத்திடலிலிருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்றன.
இந்த சூழலில், சென்னையில் பெய் கனமழை மற்றும் வெள்ளத்தால் கார் பந்தயம் திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கார் பந்தயத்தை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கார் பந்தயத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.