நடிகை த்ரிஷா குறித்த அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் ஊடகங்களின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்பட பலரும் அறிவுறுத்தினர்.
மேலும், மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷாவை தொடர்ந்து நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதனால், கொதித்துப் போன மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு, பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும், எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு கூறிய நீதிபதி, இந்த மனு குறித்து நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது மனித இயல்பு என்றும், விளம்பரத்திற்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று மன்சூர் அலிகானை நீதிபதி கண்டித்தார்.
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
This website uses cookies.