கடந்த மே மாதம் 21-ம் தேதி நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ராமர் என்பவர் மரணமடைந்தார்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட ராம்குமார் என்பவரை பெங்களூருவில் போலீஸார் கைதுசெய்தனர்.அப்போது அவருடன் தங்கியிருந்த இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவையும் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவை சஸ்பெண்ட் செய்தார்.
சத்திய சீலா, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
அங்கு பணியாற்றியபோது தொழிலதிபர் ஒருவர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்தார். இதனால் அந்த தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றதால், விசாரணை செய்த சிபிசிஐடி சத்தியஷீலா உட்பட 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது. அந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்துகு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ” விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கோவில் திருவிழாவின்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவர் இறந்ததாகவும் போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். இதுதொடர்பாக என் மீதும் புகார் கூறப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சத்திய சீலாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.