நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர், திமுகவில் கொள்கைப் பரப்பு துணை செயலாளராகவும், விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் செய்தி தொடர்பாளர் பொறுப்புகளையும் வகித்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி பிரச்சனைகளில் சிக்குவது வழக்கம்.
அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் குறித்து பேசி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
தனது யூடியூப் சேனலில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார். இதை தொடர்ந்து, தன்னை அவதூறாக பேசியதாக நடிகை விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து, குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை விந்தியா குறித்த அவதூறு வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, குமரனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமன் உத்தரவிட்டார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.