நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர், திமுகவில் கொள்கைப் பரப்பு துணை செயலாளராகவும், விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் செய்தி தொடர்பாளர் பொறுப்புகளையும் வகித்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி பிரச்சனைகளில் சிக்குவது வழக்கம்.
அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் குறித்து பேசி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
தனது யூடியூப் சேனலில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார். இதை தொடர்ந்து, தன்னை அவதூறாக பேசியதாக நடிகை விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து, குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை விந்தியா குறித்த அவதூறு வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, குமரனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமன் உத்தரவிட்டார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.