திருவள்ளூர் : ஆவடி அருகே சென்னை ஐ.ஐ.டி கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே இரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் தலை முகம் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவ்வழியே வேலை செய்து வந்த ரயில்வே பணியாளர்கள் ரயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உயிரிழந்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரது மகள் மேகாஶ்ரீ (30) என்பது தெரியவந்தது .
மேலும் திருமணமாகாத இவர் டெல்லியில் எம்.டெக்,மற்றும் முதுகலை(Phd) பட்டம் பெற்று தற்போது சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.மைய விடுதியில் தங்கி ஐ.ஐ.டி கல்லூரியில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
அடையாற்றில் பயின்று வரும் மாணவி மேகா ஸ்ரீ எதற்காக இங்கு வந்தார் ? எனவும் யாரையேனும் சந்திக்க ரயிலில் செல்லும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது வேறு எதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் ஆவடி இருப்பு பாதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி கல்லூரி ஆராய்ச்சி மாணவி ஒருவர் ஆவடி தண்டவாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.