சென்னை : சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை, நெல்லை, திருப்பூர், திருச்சி என பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக 4 பேரின் வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் கேஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.