சென்னையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டும் வரும் என்று எதிர்கட்சிகள் பொதுவாக கூறுவதுண்டு. அதைப் போலவே அண்மையில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக கூறி வருகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் மின்தடை இல்லை என்றும், நாள்தோறும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக சென்னையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், திருவொற்றியூர், கொளத்தூர், போரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களாக இரவுநேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.