சென்னை: சென்னை ராஜிவ்காந்தி மருத்துவனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கிய மருத்துவர்கள் ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2வது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் பிரிவில் முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த தீவிபத்தில் அறையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்தும், வெடித்தும் சிதறின. பின்னர், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த நோயாளிகளை பத்திரமாக மீட்டனர்.
தீ விபத்தால் அதிகளவில் புகை எழுந்ததால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நரம்பியல் வார்டில் நோயாளிகளை மீட்க சென்ற 5 டாக்டர்கள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தீவிபத்து குறித்து தகவல் அறிந்த சுதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.