சென்னை : சென்னையில் சாலையில் இருந்த பள்ளத்தினால் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்ததில், லாரி ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸோகோ என்னும் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தவர் 22 வயது இளம்பெண் ஷோபானா. இவர் நேற்று தனது சகோதரனை பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார்.
மதுரவாயலில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, அங்கு சாலையில் இருந்த பள்ளத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வேகமாக வந்த மணல் லாரி ஏறியதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது சகோதரர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். அதேவேளையில், இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு சாலைகளில் இருந்த பள்ளம்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த பள்ளம் மணல், ஜல்லிகள் கொட்டி மூடப்பட்டது.
இதனிடையே, ஷோபானாவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்த ஸோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, சென்னை மதுரவாயல் அருகே குண்டும், குழியுமான சாலைகளில் ஸ்கூட்டர் சறுக்கியதில் ஷோபனா உயிரிழந்தாகவும், மோசமான சாலைகளால் அவரது குடும்பத்தினரும், ஸோகோவும் ஷோபானாவை இழந்துவிட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால், மாநில அரசை குறை சொல்ல முடியாது என்ற கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
சாலை யார் போடுவது..? என்று ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லாமல், மத்திய, மாநில அரசுகள் பொறுப்போடு சாலைகளை தரமானதாகவும், முறையாக பராமரித்தால் மட்டுமே இதுபோன்ற உயிர் பலிகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.