சென்னை – பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற அந்த விரைவு ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக பயணிகள் அலறியடித்து ஓடினர்.
பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனிடையே, ரயிலின் ஏசி பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தீ விபத்து ஏதுமில்லை. மின் கசிவினால் புகை வெளியேறியதால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு விட்டது,’ என விளக்கம் அளித்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.