சென்னை : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அவரது அலுவலகத்தில் உள்ள பணம் எண்ணும் எந்திரம் இரண்டை எடுத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். தை அடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னை துணை போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.