நாளை நடைபெற இருக்கும் சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கான தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கான தேர்தல் 24.2.2024 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் மனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாளான 7.2.2024 மாலை வரை தகுதியான வாக்களிப்பவர்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிடவில்லை என்றும், சென்னை பல்கலைக்கழகத்தின் 131 இணைப்பு கல்லூரிகளில், 91 சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு அளிக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் பல குளறுபடிகளை செய்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
எனவே 24.2.2024 அன்று நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவிற்கான தேர்தலை உடனடியாக நிறுத்துமாறும், ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்தி, அனைத்து தகுதியான வாக்களிப்பவர்களின் பெயர் பட்டியலை தேர்தலுக்கு முன்பே வெளியிட்டு முறைப்படி தேர்தலை நடத்த விடியா திமுக அரசையும், சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.