சென்னையின் 2 வது விமான நிலையம்; பரந்தூர் விமான நிலையம்; அனுமதி அளித்த மத்திய அரசு,..

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதி இல்லாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இதற்கான நிலமெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையின் 2 வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ)மேற்கொண்டு வருகிறது.இந்த விமான நிலையம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் அனுப்பி இருந்தது.

மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். அவர் தன்னுடைய பதிலில் இந்த பரிந்துரை தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனைக்கு பின் பசுமை வழி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு முன்பு இந்த பரிந்துரை முன் வைக்கப்பட்டது.

இந்த பரிந்துரையை ஆய்வு செய்த குழு சில வழிகாட்டுதல்களோடு பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும் பசுமை வழி விமான நிலைய கொள்கைகளின் படி நிதி அளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவைச் சார்ந்தது என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு தனது பதில் தெரிவித்துள்ளார்

Sudha

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

11 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

11 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

12 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

12 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

13 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

13 hours ago

This website uses cookies.