செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலின் வேட்டி, சட்டையுடன் தோன்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில், 186 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.
6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் 186 நாடுகளைச் சேர்ந்த அணிகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்து விட்டது. இதைத் தொடர்ந்து, பார்வையாளர்களை கவரும் விதமாக, தமிழகம், கேரளா உள்பட இந்தியாவின் 8 மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, லிடியனின் இசை நிகழ்ச்சியுடன், முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் மணல் ஓவியம் உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையை அணிந்திருந்தார். அதேபோல, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியும், செஸ் கட்டம் போல கரையுடன் கூடிய வேட்டியும், துண்டை அணிந்திருந்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் திமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றுவதிலும் இருகட்சியின் தலைவர்கள் மாறி மாறி செயல்பட்டு வருவது தமிழக அரசியலுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.