ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின் : ‘முதல்வன்’ பட பணியில் உடனே எடுத்த அதிரடி நடவடிக்கை!!

ராணிப்பேட்டை : சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் 47 ஆண் பிள்ளைகள் தங்கி பள்ளி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் பெற்றோர்கள் இல்லாதவர்கள் அல்லது ஒற்றை பெற்றோர் உடையவர்கள்.

இதில் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 16 மாணவர்களும் காரை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு பாடம் சொல்லித்தர சமூக நலத்துறையின் கீழ் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் இல்லத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் கோமளா, மேலாளர் மணிகண்டன் உள்ளிட்ட 47 பணியாளர்கள் இந்த சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வருகை தந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்த பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் திடீரென காரை கூற்றோடு பகுதியில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் ஒற்றைப் பெற்றோர்கள் உள்ள மாணவர்களிடம் குழந்தைகள் இல்லம் குறித்தும் உணவு வழங்குவது குறித்தும் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடிய போது மாணவர்கள் சில புகார்களை தெரிவித்தனர். அப்போது பணியில் இல்லாத கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடனே அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உடனடி நடவடிக்கை அரசு அதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?

சொந்தத் தொகுதியிலேயே தோற்ற பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதைப் பார்க்கலாம் என சரத்குமார் கூறியுள்ளார். பெரம்பலூர்:…

1 hour ago

படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!

படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ராதிகா சரத்குமார் பகிர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 2015ல் வேல்ராஜ் இயக்கத்தில்…

1 hour ago

75 நிமிட விசாரணை.. 63 கேள்விகள்.. சீமான் கேட்ட ஒரே கேள்வி!

நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகினார். சென்னை: நாம் தமிழர்…

2 hours ago

அஜித்தை அறிமுகப்படுத்திய எஸ்பிபி? எந்த படம்னு தெரியுமா!

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். விடாமுயற்சி படம் சமீபத்தில் வெளியான நிலையில் அஜித்தின் அடுத்த படமான…

2 hours ago

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

4 hours ago

This website uses cookies.