திருவள்ளூர் : நரிக்குறவர்களுக்கு நலத்திட்டம் வாங்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவியின் வீட்டுக்கு சென்று சிற்றுண்டி அருந்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
அதன்படி, நரிக்குறவர்களுக்கு ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முதலமைச்சருடன், நரிக்குறவர் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
இதன்பின் ஆவடியில் நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இட்லி, வடை உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார். மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.