தேநீர் விருந்தில் சுவாரஸ்யம்… நேருக்கு நேர் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!!

அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழ்நாடு அரசு இடையிலான மோதல் அதிகரித்து வந்தது. குறிப்பாக தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டசபையில் தமிழ்நாடு அரசு அளித்த ஆளுநர் உரையில் மாற்றம் செய்து வாசித்தது உள்ளிட்டவை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படும். தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக அரசியல் கட்சிகளின் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குறிப்பாக அழைப்பிதழில் தமிழ்நாடு என்றும், அரசின் இலச்சினையை பொறித்தும் தேநீர் விருந்துக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அதேபோல் நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், திமுக முடிவு என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இதனிடையே இன்று காலை குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் சந்தித்து சிரித்து பேசினர்.

இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் மாளிகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறிது நேரம் ஆளுநர் ரவியுடன் உரையாற்றினார்.

அதேபோல் இந்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ-க்களும் பங்கேற்றுள்ளனர். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளார்.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சென்னையில் இல்லாததால், தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்து அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது, அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். அப்போது முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகொடுத்து வந்த போது, அதே வரிசையில் அண்ணாமலையும் இருந்தார்.

அப்போது மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலையும் கைகொடுத்தார். இந்த ஆளுநர் மாளிகை விருந்து நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

10 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

10 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

11 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

11 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

11 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

12 hours ago

This website uses cookies.