சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசம், டெல்லி, பீகார் மாநிலங்களில் அதிகளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில், சென்னை ஐஐடியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு, முகக்கவசம் அணியாதவர்களிடம் தலா 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.
இந்த சூழலில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.