உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… தீரன் சின்னமலை கல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைத்து முதலமைச்சர் உரை!!!

உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… தீரன் சின்னமலை கல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைத்து முதலமைச்சர் உரை!!!

திருப்பூர் வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதன்பின் உரையாற்றிய முதலமைச்சர், தீரன் சின்னமலை பெயரை சொன்னாலே உணர்ச்சியும், எழுச்சியும் வருகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு காணொளிக்காட்சி மூலம் கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன்.

நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் காணொலி மூலம் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. தீரன் சின்னமலை பெயரை கல்லூரிக்கு வைத்ததற்கு பாராட்டுகள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்லூரி கட்ட ஏற்பாடு செய்து கட்டி முடிக்கப்பட்டது. திருப்பூர் பகுதியில் உள்ள பெண்களுக்கான கல்லுரியாக இன்று மாறியுள்ளது. திமுக ஆட்சியில் தான் திருப்பூருக்கு 2 பெண்கள் கல்லுரி தொடங்கப்பட்டது.

கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமாக மாற்றியவர் கலைஞர். தமிழ்நாடு மாணவர்கள் உலகமெங்கும் சென்று சாதிக்க வேண்டும். திரும்பும் பக்கமெல்லாம் பள்ளியும், கல்லூரியும் உருவாக்கப்பட்டதால் இன்றைக்கு வீடுகள்தோறும் பட்டதாரிகள் வளம் வருகின்றனர். சமூக அமைப்புகளும் சேவை மனப்பான்மையுடன் பள்ளி, கல்லூரிகள் தொடங்கியுள்ளனர்.

அதனால்தான் கல்வி நீரோடை தடை இல்லாமல் நாடு முழுவதும் பாய்கிறது. இந்த கல்வி வாய்ப்பு எல்லாம் தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்க வேண்டும். முக்கியமாக பெண்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். உயர்கல்விகளை பெண்கள் அதிகம் படிக்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க தான் அரசி பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்படுகிறது பெண்களுக்கு விடியல் பயணம் என்ற கட்டணமில்லா பேருந்து வசதியை செய்து கொடுத்துள்ளோம்.

என்னுடைய கனவு எல்லாம் தமிழக மாணவ, மாணவிகள் உலகமெல்லாம் சென்று சாதிக்க வேண்டும். நீங்கள் சாதிக்கிறதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும். பெண்களை வீட்டுக்கு உள்ளே முடக்கும் காலம் எல்லாம் போய், பெண்கள் உலகை ஆளும் காலம் வந்துவிட்டது. வாங்க உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது, படித்து முன்னேறி வாங்க வரலாற்றில் உங்களுக்கான இடம் காத்திருக்கிறது. இதற்கெல்லாம் அரசை போலவே சமூக அமைப்புகளும் கல்வியும், மருத்துவத்திலும் சேவை ஆற்ற வேண்டும் என கேட்டுகொள்ளவதாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

9 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

10 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

12 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

13 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

14 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

15 hours ago

This website uses cookies.