சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு விற்பனையை உயர்த்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில் சென்னையில் அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் பால் மற்றும் பால் உப பொருட்கள் பால் பண்ணைகள் செயல்படுகிறது.
இந்தநிலையில் சோழிங்கநல்லூரில் உள்ள பால் பண்ணையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சூரிய மின் உற்பத்தியை பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின்சார செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பாலகங்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருட்களை பாலகத்தின் முன் பகுதியில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாரமும் பணிக்குழு அமைத்து நிறுவனத்தின் மேம்பாட்டுக்கான மற்றும் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான சிறந்த ஆலோசனைகள் கூறும் அதிகாரிகளுக்கு பரிசு-பாராட்டு சான்றிதழ் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் போன்ற அறிவுரைகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வழங்கினார்.
மேலும் ஆவின் ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அவர்களிடையே நிறுவனத்தின் பொருட்கள் பற்றியும் மற்றும் முன்னேற்றத்துக்கான விவரங்களை பற்றி கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பண்ணைக்கு பால் ஏற்றி வரப்பட்ட டேங்கர் லாரிகளில் பாலின் தரம் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு கமிஷனர் – ஆவின் மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.