நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், இரு நாட்களுக்கு முன்பு சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, மனைவி கயல்விழியுடன் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜயலட்சுமி விவகாரத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளதா..? என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், ‘ஒருமுறை எனது மனைவி குரல்வளையை பிடித்து, இத்தனை பெண்கள் இருக்கும் போது விஜயலட்சுமி தான் கிடைச்சாலா..?,’ எனக் கேட்டு சண்டையிட்டதாக கூறினார். மேலும், விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக வீட்டில் பேசவோ மாட்டோம் என்று கூறினார்.
சீமானின் இந்தப் பேச்சு தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, ‘சினிமாவில் இப்படிப்பட்ட பேச்சுகள் ஏற்றுக்கொள்ளப்படும், சிலர் வீட்டில் ஜாலியாக பேசுவார்கள். ஆனால், ஒரு பெண் கடந்த கால உறவு காரணமாக கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, இந்த தீவிர சூழ்நிலையில் ஒரு வீட்டில் இருப்பது போல் கேமரா முன் பேசுவதற்கு உத்வேகமாகக் கருதப்படும் ஒரு தலைவருக்கு சரியல்ல, அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என தெரிவித்தார்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.