மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழப்பெரும்ப ள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்த கோவில் முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயில் ஆகும்.
சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், இந்த கோயில் புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.
திருப்பணிகள் நிறைவடைந்து 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது.
காலை யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர்.
பிறகு கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் இந்த விழாவில் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கலெக்டர் லலிதா ஆகியோர் கலந்துகொண்டனர். நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து பகுத்தறிவுக்கு வந்த சோதனை, இதுதான் சுயமரியாதை கற்றுக்கொடுத்த இயக்கமா ? என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதனிடையே ட்விட்டரில் CM குடும்பத்தினர் பங்கேற்ற கும்பாபிஷேக வீடியோவை நகைச்சுவையாக எடிட் செய்து பதிவிட்ட பாஜக பிரமுகர் சூர்யா சிவா, படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்று ஒரு பழமொழி உண்டு.
தர்மபுரியில ஒரு டாக்டர் பைத்தியம் இருக்குமே தேவையில்லாததெல்லாம் பேசுமே இப்ப எங்க போச்சு அது .. இதுதான் திராவிடமாடலா என பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.