74வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மேலும், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆனால், ஆளுநருடனான உச்சகட்ட மோதலால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதலமைச்சர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.