நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையாவது ஆளுநர் ஆர்என் ரவி இங்கேயே இருக்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி மேடையில் அவர் பேசியதாவது :- இந்த திருமணம் சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களுக்கு அண்ணா முதல்முறையாக முதலமைச்சராக 1967ல் பொறுப்பேற்றவுடன் சட்டப்பூர்வமாக்கினார்.
சென்னை மாநகரில் கட்டிய பாலங்களுக்கு ஒதுக்கிய தொகையை விட குறைத்து கட்டி, மீதிப்பணத்தை திரும்பக் கொடுத்தோம். ஆனால் அடுத்து வந்து அதிமுக, இந்த பாலத்தில் ஊழல் நடந்துள்ளது என கூறி ஜெயலலிதாவால் இரவோடு இரவாக கலைஞரை கைது செய்தார். அப்போது இந்த வழக்கை பொதுநல வழக்கு போட்டு போராடியவர் புருஷோத்தமன்.
பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு, பங்களாவில் இருந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இன்று இங்கு நடந்திருக்கும் திருமணம் தான் திராவிடம். திராவிடம்னா என்ன என கேட்க வைத்திருக்கிறதே அது தான் திராவிடம். இரண்டு நாட்களாக புருடா விட்டு கொண்டிருக்கிறாங்க அதையெல்லாம் பார்த்து இருப்பீர்கள்.
ஆளுநர் தொடர்ந்து இங்கையே இருக்கட்டும். அது இன்னொரு பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தயவு செய்து இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் மாற்றி விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தல் வரையாவது இருக்கட்டும். மோடி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும், எனக் கூறினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.