அனைத்து துறைகளின் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் துறைவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், அனைத்துத்துறையின் செயலாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது, துறைவாரியாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்தும்…? அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார். குறிப்பாக, வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அதற்குள் செய்து முடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தவும், துவக்கப்படாத பணிகளை விரைவில் துவங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.