9,831 இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்… தீயணைப்பு, சிறைத்துறைப் பணியிடங்களுக்கும் பணி ஆணை..!

9831 இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌, 1200 தீயணைப்பு காவலர்கள்‌ மற்றும்‌ 119 சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை காவலர்கள்‌ ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ வழங்கினார்‌.

இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌, தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ வாயிலாக 9831 இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌, 1200 தீயணைப்பு காவலர்கள்‌ மற்றும்‌ 119 சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை காவலர்கள்‌ ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌.

காவல்துறை என்பது குற்றங்களைத்‌ தடுக்கும்‌ துறையாகவும்‌, தண்டனை பெற்றுத்தரும்‌ துறையாகவும்‌ மட்டும்‌ அல்லாமல்‌, குற்றங்கள்‌ நடக்காத சூழ்நிலையை உருவாக்கும்‌ துறையாகச்‌ செயல்பட வேண்டும்‌ என்ற மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி மாநிலத்தின்‌, அமைதியைப்‌ பேணிப்‌ பாதுகாத்து, சட்டம்‌ ஒழுங்கைப்‌ பராமரிக்கும்‌ முக்கியய்‌ பணிகளை ஆற்றி வரும்‌ காவல்‌ துறையின்‌ பணிகள்‌ சிறக்க பல்வேறு திட்டங்களைத்‌ தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

7.5 கோடி மக்கள்‌ வாழும்‌ தமிழ்நாட்டில்‌ 1,13,000 காவல்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆளிநர்கள்‌ பணிபுரிந்து வருகிறார்கள்‌. மாநிலத்தில்‌ சட்டம்‌ ஒழுங்கை சிறப்பாக பேணிப்‌ பாதுகாத்திட காவல்துறை, தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறை, சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை ஆகிய துறைகளில்‌ காலியாகவுள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு விரைந்து நிரப்பி வருகிறது.

அந்த வகையில்‌, தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ வாயிலாக 9831 இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌, 1200 தீயணைப்பு காவலர்கள்‌ மற்றும்‌ 119 சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை காவலர்கள்‌ ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்‌.

இந்த 9831 இரண்டாம்‌ நிலை காவலர்களில்‌, 6140 நபர்கள்‌ சிறப்பு காவல்‌ படையிலும்‌, 3691 நபர்கள்‌ ஆயுதப்படையிலும்‌ தேர்வாகியுள்ளனர்‌. இதில்‌ 2948 பெண்‌ காவலர்கள்‌ மற்றும்‌ 3 திருநங்கைகள்‌ ஆகியோரும்‌ அடங்குவர்‌. மேலும்‌, 119 சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறையில்‌ தேர்வாகியுள்ளவர்களில்‌ 12 பெண்‌ சிறைக்காவலர்களும்‌ அடங்குவர்‌. காவல்துறையின்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ நிரப்படுவதால்‌, துறையின்‌ புலனாய்வுத்‌ திறன்‌ மற்றும்‌ செயல்திறன்‌ மேலும்‌ சிறப்பாக மேம்படும்‌.

இந்த நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு சட்டத்‌ துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌. இரகுபதி, உள்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ எஸ்‌.கே. பிரபாகர்‌, காவல்துறை தலைமை இயக்குநர்‌ முனைவர்‌ செ.சைலேந்திர பாபு, சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தப்‌ பணிகள்‌ துறை இயக்குநர்‌ திரு. சுனில்‌ குமார்‌ சிங்‌, இ.கா.ப., தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறை இயக்குநர்‌ பிராஜ்‌ கிஷோர்‌ ரவி, காவல்துறை கூடுதல்‌ இயக்குநர்‌ நிர்வாகம்‌) கே. சங்கர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

1 hour ago

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

2 hours ago

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

12 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

13 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

14 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

15 hours ago

This website uses cookies.