சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
திரையுலக பிரபலமான நடிகர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
சென்னை மாவட்டம் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வருகை தந்தார். அங்கு மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- துணை ராணுவ பாதுகாப்பு தேவைப்படும் அளவிற்கு கோவையில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.
தர்ணா என்ற பெயரில் அதிமுகவினர் நாடகம் அரங்கேற்றியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் மோசடி செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும், எனக் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.