தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி, தனிப்பெரும்பான்மையும் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக உள்ள நிலையிலும் நீட் தேர்வை ரத்து செய்யாதது எதிர்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை எழச் செய்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், 2வது முறையாக மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனையும் ஆளுநர் கிடப்பில் போட்டதால் திமுகவிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்காக ஆளுநரை அமைச்சர்களும், முதலமைச்சர் ஸ்டாலினும் அடுத்தடுத்து சந்தித்து பேசினர். மேலும், மத்திய அமைச்சர்களையும், குடியரசு தலைவரையும் சந்தித்து மனுவும் கொடுத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்து, தேர்தல் வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்றி, மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது என்பதும் ஆளும் கட்சியினரிடையே பெரிய எண்ணமாக இருந்திருக்கும்.
இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு இதனை கூறினார்,” என்று தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.