சென்னை ; ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாரித்ததாக அந்த ஆடியோவில் கூறியது திமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றன. எனினும், இந்த ஆடியோ பொய்யானது என்று பழனிவேல் தியாகாரஜன் விளக்கம் அளித்து இருந்தார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாகவும், இதில் யாருக்கும் விளம்பரம் தேடி கொடுக்க விரும்பவில்லை என்று உங்களில் ஒருவன் நிகழ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இந்த நிலையில், நேற்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினையும் சந்தித்து பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.