சென்னை : திரைத்துறைக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நந்தனத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கொரோனாவினால் பல துறையினரும் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறையும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் திரைத்துறை மீண்டு முன்னேறி வருகிறது. திமுகவையும், திரைத்துறையையும் பிரிக்க முடியாது. திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழகம். நானும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால், ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன்.
திரையுலகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கு சம்பந்தமான திரைப்படங்களை எடுக்க வேண்டும்
மது ஒழிப்பு, புகைப்பிடித்தல் தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் திரைப்படங்களில் இடம்பெறுகிறது. போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் இடம்பெற வேண்டும்.
மனிதனுக்கு கல்வி, நிதி வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், மன வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி வழங்கும் துறையாக திரைத்துறை உள்ளது.
திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், திரைத்துறையில் திறமையானவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், எனக் கூறினார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.