கரூரில் ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து மாட்டிக்கொண்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, கரூரிலிருந்து தாந்தோணி மலை செல்லும் சாலையை நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சாலை அமைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு தான்தோன்றிமலை அருகில் உள்ள ரியல் கோட்ச் அருகே அமைக்கப்பட்ட இருந்த சாலையில், தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மாட்டி கொண்டது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகாததால் அனைத்து வேலையாட்களும் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்பு காவல்துறையினர் பேருந்தை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக போடும் சாலையை தரமற்ற முறையில் போடுவது கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சரின் வருகைக்காக அல்லாமல், இந்த சாலையை முன்பே தரமான முறையில் போட்டிருந்தால், மக்களின் பயன்பாட்டிற்காவது ஆகியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.