கரூரில் ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து மாட்டிக்கொண்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, கரூரிலிருந்து தாந்தோணி மலை செல்லும் சாலையை நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சாலை அமைத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு தான்தோன்றிமலை அருகில் உள்ள ரியல் கோட்ச் அருகே அமைக்கப்பட்ட இருந்த சாலையில், தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று மாட்டி கொண்டது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகாததால் அனைத்து வேலையாட்களும் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்பு காவல்துறையினர் பேருந்தை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக போடும் சாலையை தரமற்ற முறையில் போடுவது கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சரின் வருகைக்காக அல்லாமல், இந்த சாலையை முன்பே தரமான முறையில் போட்டிருந்தால், மக்களின் பயன்பாட்டிற்காவது ஆகியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.