சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா சாமி தரிசனம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 150க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தேர்தலுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தை ஒருபுறம் முன்னெடுத்திருந்தாலும், அதேவேளையில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாகச் சென்று வழிபாடு நடத்தி வந்தார்.
கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஸ்டாலினுக்கு நேர் எதிர்மாறாக இருக்கும் துர்கா ஸ்டாலினின் வேண்டுதலாலும் திமுகவுக்கு வெற்றி கைகொடுத்ததாக ஒருதரப்பினர் கூறி வந்தனர்.
இந்த சூழலில், வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவின் தன்மானப் பிரச்சனையாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து காரில் சமயபுரம் வந்த துர்கா ஸ்டாலின் முககவசம் அணிந்தபடி கோவிலின் பின்பக்க வழியாக சென்று மாரியம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, கொடிமரத்தை வணங்கிய அவர், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டி, அவர் பிரார்த்தனை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.