CM ஸ்டாலினின் ஒட்டுமொத்த குடும்பமும் சிறைக்கு செல்வார்கள்.. இபிஎஸ் ஒரு ஓட்டாண்டி : அதிமுக மூத்த தலைவர் பரபரப்பு பேச்சு!!
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற பலராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் வந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்
அதிமுகவிற்கு பாஜக எதிரி. ஆனால் திமுகவிற்கு மிகப்பெரிய எதிரி.
அதனால் முதல்வர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை எதுவும் செய்யாமல் அந்த நிதியில் ஆயிரம் ரூபாய் பணத்தை மகளிருக்கு வழங்கி அவர்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்றும் ஜெகத்ரட்சகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை உதயநிதி ஸ்டாலின் சபரீசன் ஆகியோரிடம் உள்ள 30 ஆயிரம் கோடிக்கும் குறைவானது என்றும், நிதி அமைச்சர் PTR தியாகராஜன் கூறியபடி ஆபத்தான நிலையில் தமிழகம் உள்ளது என்றும் துபாயில் பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடு செய்துள்ளதாகவும் புலனாய்வுத் துறையின் தீவிர விசாரணையில் உள்ளதாகவும் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சபரீசன் சிறைக்கு செல்வார்கள். அவர்கள் கூடாரம் மூழ்கி விடும் என்றும் பினாமிகளை நம்பி செயல்படுகிறார்கள். அவர்களின் பினாமிகளே அவர்களின் காலை வாரி விடுவார்கள் செந்தில் பாலாஜி அதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
துரோகி சசிகலா 9 சதவீதம் கமிஷனை பெற்றுக் கொண்டு இரண்டு சதவீதம் கமிஷனை கட்சிக்காக வழங்கினார் என்றும் ஆனால் எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் ஒன்றிய நகரச் செயலாளர்கள் மாவட்ட செயலாளர் என கட்சியினருக்கே வழங்கி ஓட்டாண்டியாக உள்ளார் என்றும் வருகின்ற தேர்தலில் பூத்கமிட்டி பணியாற்றுபவர்களுக்கு தேவையான பணத்தை ஒதுக்கும்படி அவரிடம் கூறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அதனை செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.