திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை என்றும், தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை – மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு, கோவை வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் வசந்தர ராஜன், திருப்பூர் தொகுதி வேட்பாளர் முருகனாந்தம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
மேலும் படிக்க: உங்க மன்னிப்பை ஏற்க முடியாது : தண்டனைக்கு தயாராக இருங்க.. PATANJALI வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!
முன்னதாக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- தமிழ்நாட்டு மக்களோடு இருப்பதற்காகவும், அவர்களோடு இணைந்து செயல்படுவதற்காகவும் பிரதமர் மோடி வருகிறார். திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை ; தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்க்கிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் திமுகவுக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் பிடிப்பது கிடையாது.
தமிழ் மக்களின் ஆசிர்வாதம் பிரதமர் மோடிக்கு தேவை ; தமிழக மக்கள் தங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும். இம்முறை திமுகவினர் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலம் வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர். தமிழ் கலாச்சாரத்தை 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி உயர்த்தி பிடித்துள்ளார் ; தமிழ்நாட்டில் பிறக்காத மறத்தமிழன் மோடி.
உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் கலாச்சாரத்தை பண்பாட்டை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் ஆ.ராசா. அதே வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டவர் கனிமொழி, எனக் கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.