கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தஞ்சையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தீவிரவாத தாக்குதல் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் ஆடக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, சையது அலிபாட்சா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 பேரின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.