கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தஞ்சையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தீவிரவாத தாக்குதல் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் ஆடக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, சையது அலிபாட்சா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 பேரின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.