கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இன்று கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மத்திய சிறை வளாகத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட சிறை கைதிகள், கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாகவும், குண்டு வெடிப்பு தண்டனை கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவுகளாக நேரம் ஒதுக்கப்பட்டு காலை மதியம் இரவு உணவுகள் வழங்கப்படுகின்றன.
இன்று காலை உணவு வழங்கும்போது விசாரணை செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடன் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, 7 விசாரணை கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக கோவை மத்திய சிறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதில் காயமடைந்த 4 போலீசாருக்கு சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதாகவும், உடலில் வேறு எந்தெந்த பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது பரிசோதனையின் மூலம் தெரியவரும், என்று கூறியுள்ளார்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.