கோவை ; “நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று மீண்டும் எம்பியான ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.
2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்து வைத்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார்.
இதனை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் கோவை மாநகரில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரபல வசனமான ” நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.இந்த போஸ்டர் தெற்கு வட்டாட்சியர் அலுவலம் அருகிலும், உக்கடம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.