கோவை : சாலையில் உள்ள சிறிய மரத்தை பிடுங்கி வீசியதுடன், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு என திமுக கவுன்சிலர் மாலதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகராட்சியின் 34வது வார்டு கவுன்சிலராகவும், கல்வி குழு தலைவருமாக இருப்பவர் மாலதி. இவர் குடியிருப்புவாசி ஒருவருடன், மரம் நட்டது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ். தொழிலதிபரான இவர், தனது வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார். இந்த மரங்களை சாலையில் வைக்கக் கூடாது என்றும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறி கவுன்சிலர் மலாதி கூறி வந்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், பொறுமையிழந்த கவுன்சிலர் மாலதி நைட்டி அணிந்திருந்த நிலையில், சுபாஷின் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள சிறிய மரத்தை பிடுங்கி எரிந்துள்ளார். ‘நான் தான் செடியை பிடுங்கினேன்… யார் கிட்ட வேணாலும் போய் சொல்லு..’ எனக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனை சுபாஷ் தரப்பினர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளனர்.
மேலும், கவுன்சிலர் மாலதி தனக்கு சொந்தமான காரை தினமும் சாலையில் நிறுத்தி விட்டு செல்வதாகவும், இதனால், ஏற்படாத போக்குவரத்து இடையூறு, சிறிய செடியினால் வந்துவிடுமா..? என்று பாதிக்கப்பட்ட சுபாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.