‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு வருது வருது பாருடா…. எப்பா அமைச்சர் வர நேரமாயிருச்சு.. எல்லாம் ரெடியா இருங்க.. ஜல்லிக்கட்டுக்கே உரிய கமெண்ட்ரிகளோடு காலை ஏழு மணிக்கு ஆரவாரத்துடன் தொடங்கியது கோவை ஜல்லிக்கட்டு.
கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார். மாவட்டம் நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெறுகிறது.
“ஏய் யப்பா மாட்டை பிடிக்கிறவங்களுக்கு ஒரு சைக்கிளு… மாடு சுத்துனா மேக்கொண்டு பரிசுப்பா… பிடிக்கிறவங்க புடிச்சிக்கங்க….” என்ற கமெண்ட்ரிகள் ஒருபுறம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
‘’ஒரு வெள்ளிக்காசுபா… இன்னும் சற்று நேரத்தில் ஒரு தங்கக் காசுப்பா. அந்த அளவிற்கு ஆட்டம் காண்பித்தன காளைகள்.
முதல் காளையாக சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுகளுடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாடுகளுடன் வருபவர்களும், மாடு பிடி வீரர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வேண்டும், அங்கு வரக்கூடிய அலுவலர்கள், பத்திரிக்கையாளர்களும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டிருந்தார்.அதன் படி சான்றிதழ் கொண்டு வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக நேற்று மாலை முதலே வெளியூர்களில் இருந்து காளைகள் வர துவங்கியது. தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டி போட்டி தொலைகாட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் பகுதியில், பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு தொடங்கிய 2 மணி நேரத்தில் 221 காளைகள் களமிறக்கி விடப்பட்டன.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.