கோவை ; கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே 3 விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் 3 இளைஞர்கள் பரிதா
சாலையோரங்களில் விளம்பர பலகை மற்றும் விளம்பர பேனர்களை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால், ஆளும் கட்சியினர் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் விதமாக, நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு, பேனர்களை ஆங்காங்கே வைப்பது வாடிக்கையாகிவிட்டது.
இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில், உரிய கட்டணம் செலுத்தி, பாதுகாப்பான முறையில் விளம்பரப் பலகையை வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அவிநாசி மெயின் சாலையில் விளம்பர பலகையை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், பெரிய பேனர் பேனல் காற்றில் ஆடியது, இதையடுத்து அனைவரும் அவசரகதியில் இறங்கிய போது, பேனர் பேனல் சரிந்தது.
விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் பெயர் குணசேகரன் வயது (52), குமார் (50), குமார் (35) என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கருத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.