சமூக வலைத்தள பிரபலம் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள்கொடி அறுத்தது தொடர்பான வீடியோவை பதிவிட்டது குறித்து தமிழ்நாடு ஊரக நலப் பணிகள் இயக்குனர் மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.
சென்னை: சிறு கடைகள் முதல் பல்வேறு உயர்தர உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் உணவுகளை சுவைத்து, அதன் தன்மை மற்றும் அதன் சூழலியலை மிகவும் எளிதாக மக்களுக்கு நெருக்கமாக வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இர்பான். இவருக்கு சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.
மேலும், இவர் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றை தனது youtube பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்கு குழந்தை பிறந்த தருணத்தை மருத்துவமனையில் நிகழ்ந்த நிகழ்வுகளுடன் வீடியோவாக மாற்றி, அதனை பதிவிட்டு இருந்தார்.
குறிப்பாக, அதில் தொப்புள் கொடியை அறுப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைய முடியும். அதேபோல், உரிய பயிற்சிகள் பெற்றவர்கள் மட்டுமே தொப்புள் கொடியை அறுக்க வேண்டும் மாறாக, இது தனி நபர் உரிமையை மீறும் செயலாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: கோர்ட் சொன்னாலும் நான் கேட்கல.. கடைசியாக இருக்கும் வரை.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
இந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு ஊரக நலப் பணிகள் துறை இயக்குனர், இர்ஃபான் மீது மருத்துவ கவுன்சிலில் புகார் அளித்துள்ளார். முன்னதாக, தற்போது இருப்பானுக்கு பிறந்துள்ள குழந்தை க்காக அவர் மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், வெளிநாட்டில் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து, அதனை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
எனவே, அப்போது அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இர்பான் அதற்கு மன்னிப்பு கோரிவிட்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மருத்துவத் துறையில் சர்ச்சையில் சிக்கியுள்ள இர்ஃபான் என்ன செய்யப் போகிறார் என்பது இனி தெரியவரும். மேலும், இவர்களுக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.