கண்டிஷன் போட்ட அமித்ஷா… தப்பியது பதவி : உடனே சென்னை வந்த அண்ணாமலை.. நடந்தது என்ன?!!

கண்டிஷன் போட்ட அமித்ஷா… தப்பியது பதவி : உடனே சென்னை வந்த அண்ணாமலை.. நடந்தது என்ன?!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் அவர் மீது ஆத்திரமடைந்த பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தது.

அதற்கு முன் அதிமுக நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என பாஜக தேசிய நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளனர்.

ஆனால், அமித்ஷா அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க மறுத்துவிட்டதால் கூட்டணி முறிந்தது. இருப்பினும் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வரலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக உடனான கூட்டணி அவசியம் என டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை நிர்மலா சீதாராமன, பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார்.

தனது யாத்திரைக்கு மத்தியில் திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை, திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவர் அனுமதி கோரினார்.

அன்றைய தினம் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் டெல்லியிலேயே தங்கி இருந்த அவர், நேற்று மதியம் அமித்ஷாவையும் ஜேபி நட்டாவையும் சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவுடனான மோதல் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். அதனை தலைவர்கள் ஏற்க மறுத்ததாகவும், அதிமுக மற்றும் அக்கட்சியினர் தலைவர்களாக போற்றுபவர்கள் பற்றியோ கருத்து சொல்லக்கூடாது என்ற கண்டிசனுடன் தலைவர் பதவியை உடனடியாக மாற்ற விரும்பவில்லை என கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த நிலையில், அதை பற்றி வாயே திறக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட்டால்போதும் என அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

தலைவர்களுடன் உடனான சந்திப்பை தொடர்ந்து அண்ணாமலை டெல்லியில் இருந்து நேற்று இரவே சென்னை புறப்பிட்டார். அண்ணாமலை சென்னை திரும்பும் தகவல் அறிந்த செய்தியாளர்கள் விமான நிலையத்தில் பேட்டி எடுக்க கூடி இருந்தனர்.

வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர், விமான நிலையத்திற்கு வந்தவுடன் செய்தியாளர்களிடம் 2 நாட்கள் கழித்து உங்களிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதன் காரணமாக மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி இணைவது கேள்விக்குறியாக உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

9 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

10 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

11 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

11 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

11 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

12 hours ago

This website uses cookies.