சின்னத்தை சொல்வதில் குழப்பம்.. உளறிய அமைச்சர் உதயநிதி : கூட்டத்தில் இருந்து வந்த குரல்..!!
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஒரு பெண் உதயநிதி ஸ்டாலினுடன் செஃல்பி எடுக்க விரும்புவதாகக் கூறினார்.
உடனே உதயநிதி அந்தப் பெண்ணின் மொபைல் போனை வாங்கி மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். பிறகு தொடர்ந்து கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய உதயநிதி, தனது ரசிகர்களுடன் போட்டு எடுத்து மகிழ்ந்த குஷியில் சின்னத்தையே தவறாகக் உளறிவிட்டார்.
திருச்சியில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், நிலையில் அந்தச் சின்னத்தைச் சொல்லி வாக்கு கேட்காமல், உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று சொதப்பலாகப் பேசினார். உதயநிதி தப்பாகச் சொன்னாலும் அலர்ட்டாக இருந்த மக்கள் உடனே தீப்பெட்டி சின்னம், தீப்பெட்டி சின்னம் என்று கோஷம் போட்டு உதயநிதிக்கு நினைவூட்டினர்.
கூட்டத்தின் கூச்சலைக் கேட்டு சுதாரித்த உதயநிதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் தீப்பெட்டி சின்னத்தைச் சொல்லி துரை வைகோவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். உதயநிதியின் உளறல் பேச்சால் சிறிது நேரம் கூடத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.
உதய் இதேபோல பேசுவது முதல் முறை அல்ல. சில தினங்களுக்கு முன் ஓர் இடத்தில் பேசிய உதய் வாக்குப்பதிவு நாள் ஆகஸ்ட் 19ஆம் தேதி என்று கூறி கூடியிருந்தவர்களை எல்லாம் சற்றுநேரம் குழப்பத்தில் ஆழ்த்தினார். பிறகு அருகில் இருந்தவர் சுட்டிக்காட்டியதை அடுத்து வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 19ஆம் தேதி என்று திருத்திச் சொல்லி சமாளித்தார்.
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.